முஸ்லிம்கள் இலங்கையில் குடியுரிமை பெற்றவர்கள்






இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்லர், அவர்கள் சஊதி அரேபியாவிலிருந்து குடியேறியவர்கள், அவர்களுக்கு இலங்கையில் எந்த உரிமையும் கிடையாது என்று கூறி உரிமைகள் சிறிது சிறிதாக பறிக்கப்பட்டு வருகின்றது. எனவே இங்கே நான் குறிப்பிடுவது சஊதி அரேபியாவிலிருந்து முஸ்லிம்;கள் வந்தாலும் அவர்கள் சில தேவைகளையும், நோக்கங்களையும், இஸ்லாத்தை போதிப்பதையும் அடிப்படையாக வைத்து வந்தனர். அவ்வாறு வந்தவர்கள் தங்களது நோக்கங்களை பூர்த்தியாக்கிக்கொண்டு மீண்டும் தங்களது நாட்டுக்கு திரும்பிவிட்டனர். அப்படியானால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் எந்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றால் அந்த அரேபியரின் இஸ்லாமியப் போதனைகளைப் பெற்று சத்திய மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றவர்கள். எனவே அன்று தொட்டு இன்று வரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம்கள் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதை நிரூபிக்கும் முகமாக தக்க ஆதாரங்களுடன் இக்குறிப்பை வரைய எண்ணுகிறேன்.

இலங்கை ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். அதன் எல்லைகளாக வடக்கே இந்திய உபகண்டமும், மேற்கே ஆபிரிக்க பெரு நிலப்பரப்பும், கிழக்கே கிழக்கிந்திய தீவுக்கூட்டங்களும் காணப்படுகின்றன. இவ்வாறு இலங்கையானது, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்தில் அமைந்துள்ளதால் இந்தியர், அரேபியர், பாரசீகர், ஐரோப்பியர் போன்றோரின் கவனத்தை வென்ற ஒரு பிரதேசமாகவும் காணப்பட்டது. எனவே அந்நாட்டவர்கள் பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் ரீதியாக தமது தொடர்புகளை வளர்த்து செல்வாக்கையும் அங்கு விதைக்க ஆரம்பித்தனர்.

இவ்வாறு வர்த்தக நோக்கில் இலங்கையுடன் தொடர்புகளை வைத்துக்கொண்டவர்களுள் அரேபியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எனவே அரேபியாவில் தோன்றி வளர்ந்த இஸ்லாம் இலங்கையிலும் பரவுவதற்கு அரேபியரே அடிப்படைக் காரணமாகத் திகழ்ந்துள்ளனர். இந்த அரேபியர் கிறித்துவுக்கு முன்பிருந்தே இலங்கையுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்;. எனினும் கி.பி. 7ம் நூற்றாண்டளவிலேயே அவர்களின் தொடர்புகள் ஆரம்பித்துள்ளன என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன.

இந்து சமுத்திர வர்த்தகப் பாதையில் இலங்கை ஒரு கேந்திர நிலையமாகத் திகழ்ந்துள்ளமையினாலும், இங்கு யானைத்தந்தம், மாணிக்கக்கற்கள், கித்துள், அகில் மற்றும் தாதுப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மருந்து மூலிகைகள் எனப் பல வகையான வியாபாரப் பொருட்கள் இங்கு மலிந்து காணப்பட்டமையினாலும் அவர்களின் பார்வை இலங்கையை நோக்கி விழ ஆரம்பித்தது. இதிலிருந்து - அரேபியர் தொடர்புகளுக்கு வர்த்தகமே அடிப்படையாகத் திகழ்ந்துள்ளது என்பதனை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி,வரலாற்றுச் சான்றுகள் மூலம் இதனை நிரூபிக்கவும் முடியும். நாடுகாண் பயணம் செய்த ஷகொலம்பஸ்| அரேபியர் கி.பி.6ம் நூற்றாண்டில் தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் வர்த்தகம் செய்ததாகக் குறிப்பிடுகின்றார். இதே போன்று முஸ்லிம் தேச சஞ்சாரிகளான இப்னுபதூதா, சுலைமான், அல்புரூனி என்போர் தமது நூற்களில் கி.பி.9ம் நூற்றாண்டிலிருந்து அரேபியாவுக்கும் இலங்கைக்குமிடையில் வர்த்தக கலாசாரத் தொடர்புகள் இருந்ததாக எழுதி வைத்துள்ளனர். இலங்கையில் பல்லின மக்களின் மனங்களிலும் இடம்பிடித்துள்ள ஷசிவனொலி பாத மலையை| முஸ்லிம்கள் ஷஆதம் மலை| என அழைப்பர். காரணம் அங்கிருக்கும் பாதச்சுவட்டினை ஆதம் (அலை) அவர்களுடையது என நம்புவதாகும். இதனால் அரேபியரும் ஆரம்ப காலம் தொட்டே இம்மலையினை தரிசிக்க வந்து சென்;றுள்ளனர். எனினும் அரேபியர் இலங்கையோடு தொடர்பு கொள்வதற்கு வர்த்தகமே பிரதான காரணியாக விளங்கியுள்ளது. இதனை பல சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு ஆரம்ப காலந்தொட்டே இலங்கையோடு தொடர்புகளை மேற்கொண்டு வந்த அரேபியர் கி.பி.15ம் நூற்றாண்டையடையும் போது இலங்கையினதும், இந்து சமுத்திரத்தினதும் வர்த்தகத்துறையை நிர்வகிக்கும் முக்கிய புள்ளிகளாக விளங்கினர். அதுமட்டுமின்றி தம் வர்த்தகத்தை சிறந்த முறையில் மேற்கொள்வதற்காக ஏனைய நாடுகளில் போலவே இலங்கையின் பல பாகங்களிலும் அரேபியர் குடியேறினர். இவர்கள் இவ்வாறு வர்த்தகத்தில் சிறந்து விளங்குவதற்கும், குடியேற்றங்;களை அமைப்பதறகும் கி.பி.8ம் நூற்றாண்டு முதல் வளர்ச்சி கண்டு வந்த அவர்களி;ன் அரசியல் ஆதிக்கமே துணைநின்றது எனலாம்.

ஆனால் அரேபியர்கள் கிருத்துவுக்கு முன்பிருந்தே இலங்கையில் குடியேறியுள்ளனர். என்ற ஒரு கருத்தும் நிலவி வருகின்றது. இதற்கு பண்டைய எழுத்தாளரான ஷபிளினி|யின்'கிருத்துவ ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே அரேபியர் இலங்கையில் குடியேறிவிட்டனர்'என்ற அவரது கருத்து சான்றாக அமைகிறது. அதுமட்டுமின்றி கலாநிதி ஷஅந்திரியஸ் நெல்| 'கி.மு.377ல் அநுராதபுரத்தில் அரேபியருக்கென தனியான ஒதுக்கிடம் காணப்பட்டது' என்ற கருத்தும் இதனை மேலும் வலுவூட்டுகின்றது. இவ்வாறான இன்னும் பல சான்றுகளை முன்வைத்து வரலாற்றாசிரியர்கள் சிலர், முஸ்லிம்கள் இலங்கையின் ஆரம்பக் குடிகளாக இருக்குமோ என ஊகிக்கின்றனர். இதனால் தானோ என்னவோ இலங்கையின் பிரதமர்களுல் ஒருவரான எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயக்கா அவர்களும் 'இலங்கை எவ்வளவு பழைமை வாய்ந்ததோ அந்தளவு முஸ்லிங்களும் பழைமை வாய்ந்தவர்கள்' என துனிவோடு கூறியிருக்கின்றார்.

இவ்வாறு இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால் அரபு இனம் என்ற வகையில் தொடர்பு கொண்டு வந்த அரேபியர் இஸ்லாம் அறிமுகமானதன் பின்னர் முஸ்லிங்களாக இலங்கையில் உலாவர ஆரம்பித்தனர். ஆனால் ஆரம்பத்தில்; வியாபார நோக்கிலேயே இலங்கையுடன் தொடர்புகளை வைத்திருந்தனர். எனினும், காலப்போக்கில் இந்த முஸ்லிங்களிடம் காணப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள், நன்னடத்தைகள் மூலம் இங்கிருந்த சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாம் பற்றியும் ஒரு அறிமுகமும், கவர்ச்சியும் ஏற்பட்டது. இது இலங்கையில் இஸ்லாத்தின் அறிமுகத்தில் ஓரளவு பங்காற்றினாலும் பல முக்கிய காரணிகள் துணை நின்றிருப்பதை சான்றுகள் மூலம் கண்டுகொள்ளலாம்.

ஹிஜ்ரி 300ல் மரணமான ஷஇப்னு ஷஹ்ராயர்| என்ற வரலாற்றாசிரியர், தனது 'அஜாயிபுல் ஹிந்த்' என்ற நூலில் 'இலங்கையிலும் அதன் அயல் நாடுகளிலும் வாழ்ந்து வந்த அரபு மக்கள்,முஹம்மத் (ஸல்)அவர்கள் பற்றியும், அவர்கள் எடுத்து வைத்த இஸ்லாம் பற்றியும் கேள்விப்பட்டு அதனைத் தெரிந்து வருவதற்கு ஒரு புலமை மிக்க தூதரையும் அவரோடு ஒரு பணியாளரையும் அணுப்பி வைத்தனர். அவர்கள் இருவரும் அங்கு சென்றடையும் போது முஹம்மத் (ஸல்)அவர்களும் முதல் கலீபாவான அபூபக்கர் (ரழி)அவர்களும் மரணித்து உமர்(ரழி)அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.எனவே அந்நத் தூதர் அவரிடமிருந்து தூய இஸ்லாத்தை அறிந்துகொண்டு இலங்கை திரும்பிக் கொண்டிருந்த வேளையில் ஷஅலுகிஸ்தான்|எனும் இடத்தில் அவரும் மரணமடைந்து விட்டார். எனினும் அவரோடு சென்றிருந்த பணியாளர் இலங்கையை அடைந்து இஸ்லாமியத் தூதை இலங்கை மக்களுக்கு எத்திவைத்தார்.'

இதற்கு ஒரு படி மேலாக ஹிஜ்ரி 6ம் வருடம் (கி.பி.628ம் ஆண்டு)நபிகளார் ஷவஹ்ப் இப்னு அபீ ஹப்ஸா| என்ற ஸஹாபியை இலங்கை அரசனிடம் அணுப்பியதாகவும் அவர் நபிகளாரின் கடிதத்தை இலங்கை அரசனிடம் கொடுத்ததாகவும் அதை வாசித்த மன்னர் அந்த ஸஹாபிக்கு'இஸ்லாமியப் பிரச்சாரத்தை, மேற்கொள்வதற்கும் அதற்காக ஒரு பள்ளியை நிறுவுவதற்கும்,விரும்பியோர் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கும், சுதந்திரமளித்ததாகவும் அவர் இங்கிருந்த அரேபியருக்கும் ஏனையோருக்கும் பிரச்சாரம் செய்து சிலரை முஸ்லிம்களாக மாற்றி ஹிஜ்ரி10ல் மீண்டும் தமது நாடு திரும்பியதாகவும் ஒரு ஆதாரப் பூர்வமான கதை காணப்படுகிறது. இந்தச் செய்தி இலங்கையில் முஸ்லிங்களின் வரலாற்றை வழங்கப் பாடுபட்ட ஷமுஸ்லிம் நேசன்| பத்திரிகையில் 1898-10-12 அன்று வெளியான இதழில் ஷஹுஸைன் இப்னு முஹம்மத்|ஷஅல்கியா அல்பாகிரி|என்ற நூலின் முதலாம் பாகத்தின் 184ம் பக்கத்திலிருந்து பெற்றுக்கொண்ட செய்தியை பிரசுரித்திருந்தார்.இஸ்லாமானது நபியவர்கள் காலத்திலேயே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என்ற உண்மையை விளங்கிக்கொள்ளலாம்.

இவ்வாறான காரணங்களால் இலங்கையில் இஸ்லாம் பரவி, இங்கு ஆரம்பத்திலிருந்தே முஸ்லிம்களின் இருப்பு உறுதியாகக் காணப்பட்டமையினால் இலங்கை ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிங்களின் ஓர் அபயபூமியாகக் கூட மாற வழிவகுத்தது. கலீபா முஆவியா (றழி)அவர்கள் உமையா ஆட்சியை நிறுவியதன் பின்னர் அவர் இஸ்லாமியப் பாரம்பரியத்திற்கு முரனான வகையில் மன்னராட்சியைத் தோற்றுவித்தார் என்பதற்காகவும்,அவருக்குப்பின் கலீபாவாக அரசியல் முதிர்ச்சியும், இராஜதந்திரமுமற்ற தனது மகன் ஷயஸீதை| நியமித்ததற்காகவும் அலி (றழி)அவர்களின் மகன் ஹுஸைன் (றழி)அவர்களும் பனூ ஹாஷிம்களும் அதனை கடுமையாக எதிர்த்தனர். இதன் காரணமாக அவர்களை எதிர்த்தவர்கள் ஹி.8ம் நூற்றாண்டில் உமையாக்களால் பலவகையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி உமையா கலீபா அப்துல் மலிக்பின்மர்வான் காலத்தில் பனூ ஹாஷிம்களைப் பழிவாங்கும் முகமாகவும் அவர்களது எழுச்சியைத் தடுக்கும் வகையிலும் அவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள்,தென்னிந்தியாவிலும் இலங்கையின் திருகோனமலை, யாழ்ப்பானம், மன்னார் குதிரைமலை,புத்தளம், கொழும்பு, பேருவளை போன்ற இடங்களிலும் குடியேறினர். இந்நிகழ்ச்சியை ஷடொனன்ட்| என்ற அறிஞர் தனது ஷஇலங்கை| என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இது மட்டுமின்றி அறிஞர் ஷசெய்யித் சுலைமான் நத்வி| அவர்கள் இலங்கையில் இஸ்லாத்தின் அறிமுகம் பற்றிக் குறிப்பிடுகையில் 'முஸ்லிம்;கள் சிந்துப்பிரதேசத்தை கைப்பற்றுவதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவரகள் இலங்கையில் குடியேறிவிட்டனர்'. எனக் குறிப்பிடுகின்றார். இதைத்தான் பின்வரும் சம்பவமும் உறுதிப்படுத்துகின்றது. அக்காலத்தில் இலங்ஙையின் மன்னராக இருந்த ஷமனவமோ| என்பவர் இலங்கையில் பிறந்து வளர்ந்த தமது பெற்றோரை இழந்த சில முஸ்லிம் பெண்களை அந்நேரத்தில் உமையா ஆட்சியின் கவர்னராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுபிடம் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். என்றாலும் அவர் சென்று கொண்டிருந்த கப்பல் தேபல் துறை முகப்பிரதேசத்தில் வழிமறிக்கப்பட்டு கடல் கொள்ளையர்களால் சூரையாடப்பட்டது. இதைக் கேள்விப்பட்ட கவர்னர் அவர்கள் முஹம்மத் பின் காஸிம் என்பாரின் தலைமையில் ஒருபடையை அனுப்பி அவர்களை மீட்டெடுத்ததோடு அப்பிரதேசமும் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. இவ்விடயத்தை ஷபலாதூரி| என்ற வரலாற்று ஆசிரியர் தனது ஷபுதூஹுல் புல்தான்| என்ற நூலில் குறிப்பிடுகின்ளார்.

இவையல்லாது, ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கையில் முஸ்லிம்கள் வாழ்ந்தமையை உறுதிப்படுத்தும் வகையில் சில அகழ்வாராய்ச்சிகள் மூலம் பெறப்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன. உதாரணமாக எமது நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ள அரபு நாணயங்களை வைத்து 'கொட்ரிங்டன்' என்ற ஆய்வாளர் 'ஹிஜ்ரி 2ம்3ம் நூற்றாண்டுகளிலேயே இலங்கையில் முஸ்லிங்கள் வாழ்ந்திருக்கிரார்கள்' என நிரூபிக்கின்றார். அதே போல் கொழும்பு முஸ்லிம் மையவாடியிலிருந்து கி.பி.377ம் ஆண்டிற்குறிய கூபி எழுத்தாலான நினைவுக் கல்லொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பக்தாத் கலீபாவால் இலங்கை முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை மேலும் கற்பிக்க அனுப்பப்பட்ட ஷகாலித் பின் பகாயாவின்| நினைவுக் கல்லென்றே நம்பப்படுகிறது. இதன் மூலம் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் இலங்கையில் இஸ்லாம் குடிகொண்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இவ்வாறு முஸ்லிம்;கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது மட்டுமின்றி அவர்களுக்கு அன்று தொடக்கம் ஒரு பாரிய செல்வாக்கு காணப்பட்டது. இவற்றை பின்வரும் சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். கி.பி.1166ல் வரலாற்றாசிரியர் ஷஅல் இத்ரீசி| எழுதிய குறிப்பின்படி அன்று 4 முஸ்லிம்;கள் இலங்கை மன்னரின் ஆலோசகர்களாக கடமையாற்றியிருக்கின்றனர்.அதேபோல் கி.பி.1341ல் இலங்கைக்கு யாத்திரை மேற்கொண்ட இப்னு பதூதா தனது குறிப்பில் கொழும்பு 'ஜலுஸ்தீ' துறைமுகம் முஸ்லிம் வர்த்தகர்களின் கண்காணிப்பின் கீழ் இருந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இன்னும் முஸ்லிங்கள் வாழ்ந்த பேருவளை காலி போன்ற பிரதேசங்களிலிருந்து வந்து கடலுரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்து அவற்றிற்கு முஸ்லிம் நாடுகளின் நீதி முறைப்படி தீர்ப்பு வழங்குவதற்கென பரிச்சயமுள்ள சமயப்பெரியார்கள், கடலோடிகள், வர்த்தகர்கள் நியமிக்கப்பட வேண்டுமென மன்னரால் பிரதானிகளுக்கு கட்டளை இடப்பட்டிருந்தது. இச்செய்தி சிங்கள மன்னர்களின் காலத்திலேயே ஒரு சக்திமிக்க மதமாக இஸ்லாம் வளர்ந்திருந்தது என்பதை உறுதிப்படுத்துகின்றது. எனவே எந்தவொன்றும் செல்வாக்கையும், சக்தியையும் பெறுவதற்கு ஒரு நீண்ட பயனம் செல்ல வேண்டுமென்பது தான் உண்மை. ஆகவே ஹி 4ம்5ம் நூற்றாண்டுகளில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் இவ்வாறான செல்வாக்கும் சக்தியும் கிடைத்;ததென்றால் அவர்கள் அதை விட எவ்வளவு காலத்திற்கு முன்பு இலங்கையில் கால்பதித்து அதற்காக பணியாற்றியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது.

எனவே கிருத்துவுக்கு முன்பிருந்தே வர்த்தக நோக்கில் இலங்கையுடன் தொடர்புகொண்;டிருந்த அரேபியர் பிற்காலத்தில் முஸ்லிம் அரேபிய வாணிபர்களாக மாற இலங்கையில் காணப்பட்ட அரேபியச் செல்வாக்கு இஸ்லாமியச் செல்வாக்காக மாற்றம் கண்டது. பின்னர் அது படிப்படியாக வளர்ந்து இலங்கையில் ஒரு இஸ்லாமிய சமூகமே தோன்ற வழிவகுத்தது என்றால் மிகையாகாது. ஆனால் ஆச்சரியம் யாதெனில், வரலாற்றுச்சான்றுகளின் படி இலங்கையின் ஏனைய மக்களை விட முற்பட்ட பெருமையை கொண்ட முஸ்லிம்கள், இன்று இலங்கையின் 3வது தேசிய இனமாகவே கொள்ளப்படுகின்றனர்.


துணை நின்றவை:


v அஸ்ஸிராஜ் ஸிராஜ் அறபுக்கல்லூரி வெளியீடு 1997. பக்.: 42

v சி.எம்.ஏ.அமீன் இலங்கையில் இஸ்லாம்.

v பாடக்குறிப்புகள் அல்ஜப்பார்; மத்திய கல்லூரி, கலகெதர

Comments

Popular posts from this blog

30 Excellent CSS Based Navigation and Buttons Tutorial

Hardening WordPress Security

Create CSS Sprites Within Seconds with SpritePad